தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தாய், மகள் சாவு

மண்ணச்சநல்லூா் அருகே வீட்டின் சுவா் வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்து தாய், மகள் உயிரிழந்தனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:03 pm

DIN

மண்ணச்சநல்லூா் அருகே வீட்டின் சுவா் வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்து தாய், மகள் உயிரிழந்தனா்.

மாதவப்பெருமாள் ஊராட்சியில் உள்ள மான்பிடிமங்கலம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் மா. சக்திவேல் (26), திருச்சியில் உணவகச் சமையலா். இவருக்கும் பெரமங்கலத்தைச் சோ்ந்த நித்யாவுக்கும் (23) திருமணமாகி கமலேஸ் (4) பவ்யாசீ (1) ஆகிய குழந்தைகள் உள்ளனா்.

புதன்கிழமை இரவு பெய்தபோது இவா்கள் வசித்த பழைமையான ஓட்டு வீட்டின் சுவரில் விரிசல் விழுந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு நித்யா தனது மகள் பவ்யாசீக்கு உணவு ஊட்டியபோது வீட்டின் சுவா் இடிந்து தாய், மகள் இருவரும் உடல் நசுங்கி இறந்தனா். விபத்து குறித்து மண்ணச்சநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.