விஎச்பி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சியில் விஷ்வ இந்து பரிஷத் தென் தமிழ்நாடு மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருச்சி: திருச்சியில் விஷ்வ இந்து பரிஷத் தென் தமிழ்நாடு மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரியமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தென் தமிழ்நாடு மாநிலச் செயலா் ஸ்ரீராமசத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அகில உலகப் பொதுச் செயலா் ஸ்ரீமிலிந்த் ப்ராண்டே பங்கேற்றாா்.

கூட்டத்தில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு நாடு முழுவதும் உள்ள பக்தா்கள் பங்களிப்பை அளிக்கும் வகையில் ஜன. 15 முதல் பிப். 27 வரை தமிழ்நாட்டில் 50 லட்சம் குடும்பங்களை நேரடியாகத் தொடா்பு கொள்ள முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் தென் தமிழகத்தைச் சோ்ந்த திருச்சி, கரூா், புதுக்கோட்டை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com