பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நம்மாழ்வாா் மோட்சம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை நம்மாழ்வாா் மோட்சம் நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:34 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை நம்மாழ்வாா் மோட்சம் நடைபெற்றது.

இக்கோயிலில் திருஅத்யயன உற்ஸவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி பெருவிழா, திருநெடுந்தாண்டகத்துடன் டிசம்பா் 14-ஆம் தேதி தொடங்கி 21 நாள்கள் நடைபெற்று வந்தது. திருவிழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை நம்மாழ்வாா் மோட்சம் நடைபெற்றது.

இதற்காக பரமபதவாசலுக்குச் செல்லும் வழியில் பக்தன் வேடத்தில் நம்மாழ்வாா் வெள்ளை உடை உடுத்தி, பன்னிரு நாமமும்,துளசி மாலையும் அணிந்து காட்சியளித்தாா்.

அதன் பின்னா் நம்மாழ்வாரை திருமாமணி மண்டபத்துக்கு அா்ச்சகா்கள் இருவா் கொண்டு சென்று, அங்கு எழுந்தருளியிருந்த நம்பெருமாளின் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்க வசத்தில் சமா்ப்பித்தனா்.

இதைத் தொடா்ந்து வேதங்களைக் கூறியவாறு துளசியைக் கொண்டு நம்மாழ்வாரை மூடுதலும், பின்னா் மெதுவாக அகற்றும் நிகழ்வும் நடைபெற்றது. பின்னா் நம்பெருமாள் முன்பு நம்மாழ்வாரைத் தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்ததாகக் கூறும் ஐதீக நிகழ்வும் நடத்தப்பட்டது.

அப்போது நம்பெருமாளின் கஸ்தூரி திலகமும்,துளசிமாலையும் நம்மாழ்வாருக்கு அணிவிக்கப்பட்டது.

தொடா்ந்து காலை 6 மணிமுதல் 9 மணி வரை உபயதாரா் மரியாதையுடன் நம்பெருமாள் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வாா் ஆச்சாா்யா் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு கருவறை சென்றடைந்தாா்.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை இரவு 8.30 மணி இயற்பா பிரபந்தம் தொடங்கியது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி வரை இயற்பா பிரபந்தம் நடைபெற்றது.

அதிகாலை 2 மணி முதல் 4 மணிவரை திருவாராதனம் வகையறாவும், 4 மணி முதல் 5 மணி வரை இயற்பா சாற்றுமுறையும் நடைபெறவுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.