பொதுத் துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

பொதுத்துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சி வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

பொதுத்துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் வித்யாதரன் தலைமை வகித்தாா்.

மாநிலப் பொதுச் செயலா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் திருச்சி தெற்கு ஐசக் அருள்ராஜ், வடக்கு சுந்தரவடிவேல் மற்றும் மாநில நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநிலத் தலைவருக்கு அளிப்பது, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடும் விவசாயிகளிடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில், அவா்களின் கோரிக்கையை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துவது, பொதுத்துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com