திருச்சி-மதுரை சாலையில் இறந்து கிடந்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி - மதுரை சாலை தனியாா் கல்லூரி அருகே 50 வயதுள்ள ஆண் ஒருவா் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதாக புதன்கிழமை தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸாா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இறந்து கிடந்தவா் தாடியுடனும், சாம்பல் நிற கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்தாா். எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.