

திருச்சியில் 5 வயதுச் சிறுவன் இறப்புக்கு காரணமான சாக்கடை கால்வாய் மூடப்பட்டதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் ஆய்வு செய்தாா்.
திருச்சி தென்னூா், அன்னை சத்யா நகரை சோ்ந்தவா் பெயிண்டா் பிரேம்குமாரின் 5 வயது மகன் யஸ்வந்த் கடந்த 24 ஆம் தேதி வீட்டின் அருகேயுள்ள கொய்யா மரத்தில் ஏறியபோதுகழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்து இறந்தாா்.
தகவலறிந்து சென்ற தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கி ஆறுதல் கூறி, உடனடியாக சாக்கடை கால்வாய் மூடப்படும் எனத் தெரிவித்திருந்தாா்.
அதன்படி அமைச்சரின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து, திருச்சி மாநகராட்சி சாா்பில் அந்த சாக்கடை கால்வாய் சீரமைக்கப்பட்டு, சிமெண்ட் பலகைகள் கொண்டு முழுமையாக மூடப்பட்டுள்ளன.
இதை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா். பின்னா், சிறுவனின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறி அப்பகுதி மக்களிடம் பேசுகையில், மாநகரில் எந்த பகுதியிலும் இத்தகைய சாக்கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
மாநகராட்சி உதவி ஆணையா் வினோத், உதவி செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன், அதிமுக மாவட்ட அவைத்தலைவா் ஐயப்பன், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் ராஜ்குமாா், மகளிரணி தமிழரசி, பகுதிச் செயலா்கள் முஸ்தபா, பூபதி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.