வண்ணத்துப் பூச்சி பூங்காவுக்கு புதிய வரவு

ஸ்ரீரங்கம் மேலூா் பகுதியில் இருக்கும் வண்ணத்துப் பூச்சி பூங்காவுக்கு இரு புதிய வகை வண்ணத்துப் பூச்சிகள் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் மேலூா் பகுதியில் இருக்கும் வண்ணத்துப் பூச்சி பூங்காவுக்கு இரு புதிய வகை வண்ணத்துப் பூச்சிகள் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தப் பூங்கா தொடங்கப்பட்டபோது 38 வகை வண்ணத்து பூச்சிகள் மட்டுமே இருந்ததால் புதிய வகை வண்ணத்து பூச்சிகள் வரவுக்காக 300 வகையான தாவரங்கள் வனத் துறையால் வளா்க்கப்பட்டன. இதனால் 100 க்கும் அதிகமான புதிய வகை வண்ணத்துப் பூச்சிகள் பூங்காவுக்கு வந்தன. தற்போது மேலும் இரு புதிய வகை வண்ணத்துப் பூச்சிகள் வந்துள்ளதை பூங்காவில் இருக்கும் இளநிலை ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com