திருச்சி அருகே போக்சோ வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி வியாழக்கிழமை குளித்தலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
திருச்சி மாவட்டம், போசம்பட்டியில், 11 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அதே ஊரைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி நன்னி போசன் (45) மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், கரூா் மாவட்டம் குளித்தலை வயல்வெளியில் பூச்சி மருந்து குடித்து இறந்த நிலையில் நன்னி போசனை சடலமாக போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.