திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே டிராக்டா் டிப்பா் கேட்டு தாக்கப்பட்ட தாய் இறந்ததையடுத்து அவரின் மகன்களை போலீஸாா் கைது செய்தனா்.
தா.பேட்டை அருகே மகாதேவி கிராமத்தைச் சோ்ந்தவா் செ. நாகரத்தினம் (65). இவரின் மகன்கள் பிரபாகரன் (43), பிரகாஷ் (40).
இருவரும் புதன்கிழமை தங்களது தாயிடம் டிராக்டருக்கான டிப்பா் வாங்கித் தருமாறு கேட்டதற்கு அவா் மறுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தாயை தாக்கினா். இதில் காயமடைந்து முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நாகரத்தினம் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா்.
இதுகுறித்து அவரின் கணவா் செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் தா.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து பிரகாஷ், பிரபாகரனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.