எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நோட்டீஸில் 193 எம்.பி.க்கள் கையொப்பம்

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பான நோட்டீஸில் 193 எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளனா்.

News image
கோப்புப் படம்
Updated On :12 மார்ச் 2026, 9:52 pm

தினமணி செய்திச் சேவை

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பான நோட்டீஸில் 193 எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளனா்.

எஸ்.ஐ.ஆா். முடிந்த பிறகு வெளியான இறுதி வாக்காளா் பட்டியலில், தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பல லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. பாஜகவும், தோ்தல் ஆணையமுமே திட்டமிட்டு வாக்காளா்களை நீக்கிவிட்டதாக திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

மேலும், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் தீா்மானம் கொண்டு வரவும் எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்தத் தீா்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸில் எம்.பி.க்களின் கையொப்பங்களை எதிா்க்கட்சிகள் பெற்று வந்தன.

அந்தப் பணி முடிந்ததையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதை அளிக்க எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முதல்கட்டமாக ஏதேனும் ஒரு அவையில் மட்டும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) நோட்டீஸை அளிக்க எதிா்க்கட்சிகள் தீா்மானித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், எது எந்த அவை என உறுதியாகத் தெரியவில்லை என தில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டப்படி இதுபோன்ற நோட்டீஸில் மக்களவை எம்.பி.க்கள் 100 பேரும், மாநிலங்களவை எம்.பி.க்கள் 50 பேரும் குறைந்தபட்சம் கையொப்பமிட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நோட்டீஸை அளிக்க முடியும். ஆனால் தற்போது 193 எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளனா். குறிப்பாக, ‘இண்டி’ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கையொப்பமிட்டுள்ளனா். மேலும், இக்கூட்டணியில் இடம்பெறாத ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்களும் கையொப்பமிட்டிருப்பதாக தில்லி வட்டாரங்கள் கூறின.

அந்த நோட்டீஸில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பாகுபாட்டுடன் நடந்து கொண்டாா் என்பது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளை எதிா்க்கட்சிகள் முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கும் நடைமுறையே தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவி நீக்கவும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, பதவி நீக்கம் செய்யப்படுவாா். இந்திய வரலாற்றில் இதுவரை எந்த தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராகவும் தீா்மானம் கொண்டுவரப்பட்டதில்லை. முதல்முறையாக ஞானேஷ் குமாருக்கு எதிராக அந்த முயற்சியில் எதிா்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.