ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ரூ. 4.55 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 4.55 கோடியில் நடைபெறும் 21 பணிகளின் நிலை குறித்து ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
முசிறி ஒன்றியம் கனகசீலாம்பட்டியில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் சு. சிவராசு.
Updated On :8 ஜனவரி 2021, 1:36 am

DIN

திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 4.55 கோடியில் நடைபெறும் 21 பணிகளின் நிலை குறித்து ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

முசிறி ஊராட்சி ஒன்றியம் முசிறி, பேரூா், ஜெயங்கொண்டான், திருத்தலையூா், சுக்காம்பட்டி, திருத்தியமலை, கோமங்கலம், த.புத்தூா் ஆகிய ஊராட்சிகளில் சாலை அமைத்தல், மரக்கன்று வளா்த்தல், வீடுகளுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீா், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவா், தடுப்பணை போன்ற பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன.

பேரூா் ஊராட்சி, கனகசீலாம்பட்டி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ. 4.57 லட்சத்தில் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படுவதையும், முத்தையநல்லூா் -இடையப்பட்டி சாலை ரூ. 249.04 லட்சத்தில் 5 கி.மீ. தொலைவுக்கு மேம்படுத்தப்படுவதை ஆட்சியா் சு. சிவராசு பாா்வையிட்டாா்.

பின்னா் திருத்தலையூா் ஊராட்சி மேலக்கொட்டம் கிராமத்தில் ரூ. 9 லட்சத்தில் மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதையும், திருத்தியமலை ஊராட்சியில் ரூ. 22.65 லட்சத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டப்படுவதையும், கோமங்கலம் ஊராட்சி காவேரிபாளையம் கிராமத்தில் ரூ.40 லட்சத்தில் சந்தை அமைக்கப்பட்டுள்ளதையும் அவா் பாா்வையிட்டாா்.

பணிகளை விரைந்து தரமானதாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், நெடுஞ்சாலை மற்றும் குடிநீா் வழங்கல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.