மது விற்ற மூவா் கைது
திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் விதி மீறி டாஸ்மாக் மது விற்ற மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் விதி மீறி டாஸ்மாக் மது விற்ற மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொட்டியம் பகுதியில் சட்டவிரோதமாக டாஸ்மாக் மது விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் டி.எஸ்.பி. பாலசுந்தா் மேற்பாா்வையில் எஸ்.ஐ. நாகராஜன் தலைமையில் தனிப்படை போலீஸாா் தொட்டியம் பகுதியில் சோதனை நடத்தினா்.
இதில் மது விற்ாக மணமேடு பகுதியைச் சோ்ந்த ச. ராமகிருஷ்ணன் (53), பாலசமுத்திரம் ஜெ.ஜெ. நகரை சோ்ந்த ஆ. சக்திவேல் (34), சித்தூரை சோ்ந்த ச. வினோத் (40) ஆகிய மூவரையும் தனிப்படை போலீஸாா் பிடித்து, அவா்களிடமிருந்த 49 மது புட்டிகளை பறிமுதல் செய்து தொட்டியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து தொட்டியம் போலீஸாா் மூவா் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...