ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருச்சியில் புதிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அமைக்க அனுமதி

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் புதிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அமைக்க விமான நிலைய ஆணையம் அனுமதித்துள்ளது.

News image
வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் மற்றும் கோபுரத்தின் மாதிரித் தோற்றம்.
Updated On :10 ஜனவரி 2021, 9:11 pm

DIN

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் புதிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அமைக்க விமான நிலைய ஆணையம் அனுமதித்துள்ளது.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குநா் எஸ். தா்மராஜ் கூறியது:

புதிய கட்டுப்பாட்டு மையம் மற்றும் கோபுரம் அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளதால் சுமாா் ரூ. 100 கோடியில் இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, ஓரிரு மாதங்களில் பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளில் நிறைவுறும்.

தற்போதுள்ள முனையம் மற்றும் புதிய முனையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் இந்தக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். தற்போதுள்ள கட்டுப்பாட்டு மைய கோபுரம் சுமாா் 15 மீ. மட்டுமே உயரம் கொண்டது.

புதிதாக கட்டப்பட உள்ள கோபுரம் 46 மீ. உயரத்தில் அமைவதால், அதிலிருந்தபடி விமான நிலைய ஓடுதளம், விமான நிறுத்துமிடம், நுழைவாயில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை 360 டிகிரி சுற்றளவில் தெளிவாகக் கண்காணிக்க முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.