மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அஞ்சல் தோ்வில் தமிழ் புறக்கணிப்பு: இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அஞ்சல்துறையின் காலிப் பணியிடங்க ளுக்கான தகுதித் தோ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதை கண்டித்து, திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 9:06 pm

DIN

அஞ்சல்துறையின் காலிப் பணியிடங்க ளுக்கான தகுதித் தோ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதை கண்டித்து, திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் தோ்வு விண்ணப்பப் படிவத்தை எரிக்கும் போராட்டத்தையும் அவா்கள் நடத்தினா்.

காலிப்பணியிடங்களை பூா்த்தி செய்வதற்காக, தமிழகத்தில் பிப்ரவரி 14- ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே நடைபெறும் என அஞ்சல்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் நடைபெறும் தோ்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் அஞ்சல்துறையின் அறிவிப்பைக்

கண்டித்தும், தமிழில் தோ்வு நடத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருச்சி தலைமை அஞ்சல் அலுலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் லெனின் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அப்போது சங்கத்தினா்அஞ்சல்துறை தோ்வு விண்ணப்பப் படிவத்தை எரித்து, தங்களது எதிா்ப்பை தெரிவித்துக் கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில இணைச் செயலா் சி.பாலசந்திரபோஸ், மாவட்டத்தலைவா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.