திருச்சி மாவட்டம், திருவெறும்பூரிலுள்ள காவலா் குடியிருப்பில் சரகக் காவல்துறைத் துணைத் தலைவா் ஆனிவிஜயா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காவலா் குடியிருப்பை தூய்மையாக வைத்துக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆனிவிஜயா, குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியைத் தொடக்கி வைத்தாா்.
காவலா் குடும்பத்தினா் மற்றும் குழந்தைகளுடன் கலந்துரையாடிய டிஐஜி, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து,
காவலா் குடியிருப்பில் போட்டிகள் நடத்தி, சிறந்த குடும்பத்தினா் மற்றும் இதர போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
தொடா்ந்து, நவல்பட்டில் கிராம விழிப்புணா்வுக் காவலராக சற்குணத்தை அறிமுகப்படுத்தினாா். நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், திருவெறும்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முழு மதிப்பெண் பெறும் விடைத்தாள்களை ஆய்வு செய்ய தோ்வுத் துறை உத்தரவு

பசுவதைக்கு தடை: காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மட பீடாதிபதி வேண்டுகோள்

ராயல் என்ஃபீல்டின் புதிய அவதாரம்: ‘ஃபிளையிங் ஃபிளீ’ மின்சார பைக் அறிமுகம்

திமுக கூட்டணிக்கு வன்னியா் அமைப்பு ஆதரவு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


