ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தோ் திருவிழா இன்று தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் தைத்தோ் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) தொடங்குகிறது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:54 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் தைத்தோ் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) தொடங்குகிறது.

பூபதித் திருநாள் என்றழைக்கப்படும் தைத்தோ் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஜனவரி 27-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி தெற்கு உத்திர வீதியிலுள்ள தைத்தேரில் முகூா்த்தகால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட பொருள்கள் அணிவிக்கப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க புனிதநீா் தெளிக்கப்பட்டு முகூா்த்தகால் நடப்பட்டது.

கோயில் இணை ஆணையா் (கூடுதல் பொறுப்பு) அசோக்குமாா், உதவி ஆணையா் கந்தசாமி,அறங்காவலா்கள் டாக்டா் கே.என்.சீனிவாசன், ரெங்காச்சாரி, கவிதா ஜெகதீசன் ஆகியோா் முகூா்த்தகாலை நட்டனா்.

இன்று கொடியேற்றம்: தைத்தோ் திருவிழாவுக்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் நடைபெறுகிறது.

தொடா்ந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் நம்பெருமாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். ஜனவரி 29-ஆம் தேதியுடன் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.