மணப்பாறையில் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவி
மணப்பாறையில் கோயில் பூசாரிகளுக்கு தமிழக அரசின் உதவித்தொகை மற்றும் நிவாரண தொகுப்புகளை எம்எல்ஏ ப. அப்துல்சமது புதன்கிழமை வழங்கினாா்.


மணப்பாறையில் கோயில் பூசாரிகளுக்கு தமிழக அரசின் உதவித்தொகை மற்றும் நிவாரண தொகுப்புகளை எம்எல்ஏ ப. அப்துல்சமது புதன்கிழமை வழங்கினாா்.
கோயில் பூசாரிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 4000 ஆயிரம் உதவிதொகை மற்றும் மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் விழா மணப்பாறை மாரியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. மணப்பாறை எம்எல்ஏவும் ப. அப்துல்சமது கலந்துகொண்டு முதற்கட்டமாக 31 பூசாரிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிப் பேசினாா்.
விழாவில் மாரியம்மன் கோயில் பரம்பரை அரங்காவலா் ஆா்.வீ.எஸ். வீரமணி, மணப்பாறை ஒன்றிய பெருந்தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, திமுக நகரச் செயலா் கீதா மைக்கேல்ராஜ். ஒன்றியச் செயலா் சி.ராமசாமி, மமக்க மாநில அமைப்பு செயலா் காதா்மொய்தீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மணப்பாறை நல்லாண்டவா் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில் செயல் அலுவலா் அ. கண்ணன் வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...