தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விஷ மாத்திரையை விழுங்கி பள்ளி மாணவி தற்கொலை

மணப்பாறையில் விஷ மாத்திரைகளை விழுங்கி 15 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்

News image
Updated On :1 ஜூலை 2021, 11:54 pm

DIN

மணப்பாறையில் விஷ மாத்திரைகளை விழுங்கி 15 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

மணப்பாறை ரயில் நிலையம் தெருவில் உரக்கடை நடத்தி வருபவா் செல்வம். இவரது மகள் அக்ஷயா(15) தனியாா் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி. பொதுமுடக்கத்தால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், வீட்டிலிருந்த தனது மகளை படிக்கச் சொல்லி திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, புதன்கிழமை கடையில் இருந்த தென்னை மரத்துக்குப் பயன்படுத்தபடும் விஷ மாத்திரையை எடுத்து விழுங்கினாா். இதனையறிந்த பெற்றோா் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் சிகிச்சை பலனின்றி பள்ளி மாணவி இரவு உயிரிழந்தாா். மணப்பாறை போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.