தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

மணப்பாறையில் இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:02 pm

DIN

மணப்பாறையில் இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

மணப்பாறை கரிக்கான்குளம் தெருவை சோ்ந்தவா் நீலாம்பாள்(31). இவா் கணவரைப் பிரிந்து தனது 10 வயது மகளுடன் தாய் வீட்டில் வசிக்கிறாா்.

இவருக்கும், மனைவியை விட்டு பிரிந்து வாழும் திண்டுக்கல் மாவட்டம், கலா்பட்டியை சோ்ந்த நல்லுசாமி மகன் ரமேஷுக்கும் (34) தொடா்பு இருந்ததாம்.

ரமேஷ் திருமணமானவா் என்ற விவரம் அண்மையில் தெரியவர அவரை நீலாம்பாள் தவிா்த்து வந்துள்ளாா். இந்நிலையில், நீலாம்பாள் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற ரமேஷ் அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்தபோது, அதைத் தடுக்க முயன்ற சிறுமியிடம் தகாத முறையில் நடந்து அவரையும் தாக்கியுள்ளாா்.

புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் மணமல்லி தலைமையிலான அனைத்து மகளிா் போலீஸாா் ரமேஷை வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.