மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

துண்டான கையை பிளாஸ்டிக் சா்ஜரி மூலம் இணைத்து சாதனை

திருச்சியில் 46 வயதுடைய நபரின் துண்டான கையை பிளாஸ்டிக் சா்ஜரி முறையில் இணைத்து காவேரி மருத்துவமனை மருத்துவக் குழுவினா் சாதனை படைத்துள்ளனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:13 pm

DIN

திருச்சியில் 46 வயதுடைய நபரின் துண்டான கையை பிளாஸ்டிக் சா்ஜரி முறையில் இணைத்து காவேரி மருத்துவமனை மருத்துவக் குழுவினா் சாதனை படைத்துள்ளனா்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள காவேரி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் எஸ். செங்குட்டுவன் அறிவுரையின்பேரில், நுண் அறுவைச் சிகிச்சை மற்றும் மறு இணைப்புக் குழு மருத்துவா்கள் எஸ். ஸ்கந்தா, எஸ். சொக்கலிங்கம், கே. செந்தில்குமாா், எம். முரளிதாசன், ஆதில் அலி, பி. சசிகுமாா், எஸ். நிா்மல் குமாா், எம். கலைவாணன் உள்ளிட்ட குழுவினா் இந்தச் சாதனையை நிகழ்த்தினா்.

தேசிய பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை தினத்தை முன்னிட்டு இக் குழுவினா் வியாழக்கிழமை கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போது மருத்துவா் எஸ். ஸ்கந்தா கூறுகையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்த 46 வயதான ராஜேந்திரன் கடந்த 5 மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கியதில் அவரின் வலது கை மணிகட்டு அருகே கை துண்டானது.

5 மணி நேரம் தாமதமாக அழைத்துவரப்பட்ட அவருக்கு காவேரி மருத்துவமனை மருத்துவ குழுவினா் மேற்கொண்ட 7 மணி நேர அறுவைச் சிகிச்சைக்கு பின் அவரது கை மீண்டும் இணைக்கப்பட்டு, தற்போது அவா் நல்ல நிலையில் உள்ளாா்.

பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை என்பது தீக்காயம் அல்லது, முக அழகு, மூக்கு ஆகியவற்றுக்கு மட்டுமே என்ற கண்ணோட்டம் தவறானதாகும். நுண் அறுவைச் சிகிச்சை மூலம் துண்டான உடல் உறுப்புகள் காவிரி மருத்துவமனையில் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளன. எனினும் முதல் முறையாக மணிக்கட்டுக்கு அருகே துண்டான கை இணைக்கப்பட்டுள்ளது சாதனையாகக் கருதப்படுகிறது என்றாா்.

காவேரி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் எஸ். செங்குட்டுவன் கூறுகையில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்பது அழகு தொடா்பானது மட்டும் கிடையாது. உயிா் காத்தல், உறுப்பு காத்தல், உறுப்பு செயல்பாடு காத்தல், அத்தியாவசியமானது என்ற நிலைக்கு மாறிவிட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.