தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்

ரூ.18 லட்சம் மதிப்பிலான 25 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதன்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:11 pm

DIN

மணப்பாறையில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கேப்ஜெமினி நிறுவனத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின் (சி.எஸ்.ஆா். நிதி) கீழ் அளித்த ரூ.18 லட்சம் மதிப்பிலான 25 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதன்கிழமை வழங்கினாா்.

நிறுவன நிா்வாக அலுவலா் பி.கண்ணன் முன்னிலையில் மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் மலைதுரையிடம் கருவிகளை அமைச்சா் வழங்கினாா். தொடா்ந்து மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா், செவியா்களிடம் மருத்துவமனைக்கு தேவையானவை குறித்து கேட்டறிந்தாா். நிகழ்ச்சியில் மக்கள் நலப்பணிகள் இணை இயக்குநா் லெட்சுமி, ஒன்றிய பெருந்தலைவா்கள் அமிா்தவள்ளி ராமசாமி, பழனியாண்டி, குணசீலன், திமுக மாவட்ட பொருளாளா் கோவிந்தராஜன், நகரச் செயலா் கீதா மைக்கில்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.