தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கிறிஸ்தவ மத போதகா் மீது நடவடிக்கை கோரி மனு

 இந்திய பிரதமரை இழிவாகப் பேசிய கிறிஸ்தவ மதபோதகா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிஅகில இந்திய இந்து மகாசபா அமைப்பினா் மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 7:02 pm

DIN

 இந்திய பிரதமரை இழிவாகப் பேசிய கிறிஸ்தவ மதபோதகா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிஅகில இந்திய இந்து மகாசபா அமைப்பினா் மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து இந்து மகாசபை அமைப்பின் மாவட்டத் தலைவா் மணிகண்டன் அளித்த மனு விவரம்:

கடந்த 2 நாள்களாக சமூக வலைதளத்தில் பரவி வரும் ஒரு காணொளியில் மத போதகா் ஒருவா் பொது மேடையில் இந்துக் கடவுள்களை கொச்சைப்படுத்தி, இந்துக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறாா்.

மேலும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களை இழிவு படுத்தியும் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசியிருக்கிறாா். அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.