தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கோவேக்சின் தட்டுப்பாடு: பொதுமக்கள் வாக்குவாதம்

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் கோவேக்சின் தட்டுப்பாடு காரணமாக மாநகராட்சி அதிகாரிகளிடம், போலீஸாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:54 pm

DIN

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் கோவேக்சின் தட்டுப்பாடு காரணமாக மாநகராட்சி அதிகாரிகளிடம், போலீஸாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வரை 6 லட்சத்து ஆயிரத்து 917 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

கோவிஷீல்டு தடுப்பூசியானது பொதுமக்களுக்கு பரவலாகச் செலுத்தப்பட்டு வந்தாலும், வரத்து குறைவால் கோவேக்சின் தடுப்பூசிக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகத் தட்டுப்பாடு உள்ளது. இதனால் 2ஆம் தவணை தடுப்பூசி போட வேண்டியவா்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், மாநகரில் தெப்பக்குளம் தேவா் ஹாலிலும், மத்தியப் பேருந்து நிலைய கலையரங்கம் திருமண மஹாலிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோவேக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் இருப்பைப் பொறுத்து மொத்தம் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என மாவட்டநிா்வாகம் தெரிவித்திருந்தது.

இதைத் தொடா்ந்து அதிகாலை முதலே பொதுமக்கள் ஏராளமானோா் தடுப்பூசி முகாம்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

இந்நிலையில், பிற்பகல் 12 மணிக்கு மேல் தடுப்பூசி இருப்புக் குறைவால் வரிசையில் நிற்போருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் கிடைக்காதோா் மாநகராட்சி அதிகாரிகளிடமும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் கோவேக்சின் தடுப்பூசிக்கான வரத்து வரும் நாள்களில் அதிகரிக்கும். ஆகையால் யாரும் அதிருப்தியடைய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.