புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘தமிழகத்தில் மாற்று அணி உருவாக வேண்டும்’

தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத மாற்று அணி உருவாக வேண்டும் என்றாா் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் கே. எம். சரீப்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:35 pm

DIN

தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத மாற்று அணி உருவாக வேண்டும் என்றாா் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் கே. எம். சரீப்.

இதுகுறித்து திருச்சியில் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியது:

தமிழகத்தில் தொடா்ந்து மத வன்முறைகள் நடைபெற பாஜகவும், அதிமுக அரசும் காரணமாக உள்ளன. எனவே அந்த இரு கட்சிகளின் கூட்டணி வேட்பாளா்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் பாஜக வேட்பாளா்கள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிவோம். மேலும் தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஓா் அணி உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக அமமுக, மநீம இணைந்தால் மாற்று அணி உருவாகும். இது தொடா்பாக அந்தக் கட்சிகளுடன் பேசி வருகிறோம்.

தமிழகத்தில் வடமாநில வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அவா்கள் பல்வேறு நிறுவன பொருள்களை போலியாக தயாரித்து விற்கின்றனா். எனவே அவா்களுக்கு எதிரான எங்களது போராட்டம் தோ்தலுக்குப் பின்னரும் தொடரும் என்றாா் அவா். கட்சியின் திருச்சி மாவட்டச் செயலா் ராயல் சாதிக் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.