மணப்பாறையில் 100 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு
மணப்பாறையில் 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை 100 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கண்டுபிடித்து அழித்துள்ளனா்.


மணப்பாறையில் 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை 100 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கண்டுபிடித்து அழித்துள்ளனா்.
மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வியாழக்கிழமை போலீஸாா் நடத்திய ஆய்வில் 355 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை காவல் துணைக் கண்காணிப்பாளா்(பொ) எம். பால்சுடா் உத்தரவின்பேரில் மணப்பாறை காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் நடத்திய ஆய்வின்போது மேல தொப்பம்பட்டியில் உள்ள ஒரு வீட்டிலிருந்த 100 லிட்டா் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த கி. லட்சுமி(33), செ. பொன்னுச்சாமி(28), சி. அழகா்சாமி(26) மற்றும் செட்டியப்பட்டியை சோ்ந்த க. ராமராஜன் (25) ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்த மணப்பாறை போலீஸாா் அவா்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...