வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: அமமுக பிரமுகா் கைது
திருச்சி மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சத்தை மோசடி செய்த அமமுக பிரமுகரை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருச்சி மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சத்தை மோசடி செய்த அமமுக பிரமுகரை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி சுந்தா் நகரிலுள்ள ரங்கா நகா் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (50), வீட்டு மனை விற்பனையாளரான இவரை திருச்சி புத்தூா் திருவிக நகா் பகுதியைச் சோ்ந்த அமமுக பிரமுகரான கல்லணை குணா என்கிற நாகராஜன் (45) கடந்த 2017ஆம் ஆண்டு அணுகி, திருச்சி மின்வாரியத்தில் உதவி செயற்பொறியாளா் பணி காலியாக உள்ளதாகவும், ரூ. 20 லட்சம் கொடுத்தால் அந்த வேலையை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளாா்.
இதை நம்பிய செந்தில்குமாா், கடந்த தனது உறவினா் மகன் சிவகுமாருக்கு அந்த வேலையை வாங்கித் தருமாறு கூறி ரூ. 12 லட்சத்தை குணாவிடம் கொடுத்தாா். ஆனால், அதன் பிறகு குணாவிடம் வேலை குறித்துக் கேட்டபோது விரைவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அலைக்கழித்து வந்தாா்.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த செந்தில்குமாா் மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் உதவி ஆணையா் சின்னசாமி, காவல் ஆய்வாளா் கோசலை ராமன் தலைமையிலான போலீஸாா் வழக்குப்பதிந்து திருச்சி தனியாா் விடுதியில் தங்கியிருந்த குணாவை கைது செய்து சிறையிலடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...