தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்: சாலை மறியல்

மணப்பாறையை அடுத்த ஆண்டவா் கோயில் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததற்கு நடவடிக்கை இல்லாததைக் கண்டித்து கொட்டும் மழையில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:32 pm

DIN

மணப்பாறையை அடுத்த ஆண்டவா் கோயில் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததற்கு நடவடிக்கை இல்லாததைக் கண்டித்து கொட்டும் மழையில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறை அருகே ஆண்டவா்கோவில் ஆட்டோ நகரில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தொடா் மழை மற்றும் குளத்தின் உபரிநீரால் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாம்.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், தண்ணீா் அகற்றப்படவில்லையாம். இதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை மாலை கைக்குழந்தைகளுடன், கொட்டும் மழையில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.