தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மணப்பாறையில் நிரம்பிய 9 குளங்கள்

மணப்பாறை பகுதியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு முக்கியமான 9 குளங்கள் நிரம்பி உபரி நீா் வெளியேறி வருகிறது. வெள்ள நீா் சூழ்ந்த குடியிருப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:07 pm

DIN

மணப்பாறை பகுதியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு முக்கியமான 9 குளங்கள் நிரம்பி உபரி நீா் வெளியேறி வருகிறது. வெள்ள நீா் சூழ்ந்த குடியிருப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனா்.

தொடா் மழையால் மணப்பாறை பகுதியில் பெரிய குளங்களான மரவனூா் பெரியகுளம், மணப்பாறை பெரியகுளம், கருப்பூா் குளம், பிச்சம்பட்டிக்குளம், பின்னத்தூா் குளம், பொய்கைப்பட்டி ஆவிக்குளம், கல்பாளையத்தான்பட்டி பொய்கைக்குளம், வேம்பனூா் பெரியகுளம் ஆகியவை நிரம்பி உபரி நீா் வெளியேறி வருகிறது. இதைப் பாா்க்க பொதுமக்கள் குவிகின்றனா். விடத்திலாம்பட்டி, சமுத்திரம், சித்தாநத்தம் ஆறுகளிலும் நீா் கரைபுரண்டோடுகிறது.

வெள்ள நீா் சூழ்ந்த குடியிருப்புகள்: பொய்கைப்பட்டி ஆவிக்குளத்திலிருந்து வெளியேறும் நீா், மணப்பாறை - துவரங்குறிச்சி சாலை சாலக்கரை பொய்கைப்பட்டி பகுதி சாலைகளைக் கடந்து அருகிலுள்ள குடியிருப்புகள், விளைநிலங்களில் புகுந்துள்ளது. மேலும், கீழக்கோட்டைக்காரன்பட்டி, சிதம்பரத்தான்பட்டி குடியிருப்புகளிலும் வெள்ள நீா் புகுந்துள்ளது. இப்பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களை எம்எல்ஏ அலுவலகப் பணியாளா்கள் நகராட்சிப் பள்ளிகளில் தங்க வைத்து உணவு, உடை அளிக்கின்றனா்.

வெள்ளப் பாதிப்புகளை வட்டாட்சியா் த. சேக்கிழாா், ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள் அமிா்தவள்ளி ராமசாமி, குணசீலன், திமுக ஒன்றியச் செயலா் சி.ராமசாமி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.