நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

முறைகேடு புகாா் எதிரொலி:2 ஊராட்சித் தலைவா்களின் காசோலை அதிகாரம் நிறுத்தம்

முறைகேடு புகாா் எதிரொலியாக 2 ஊராட்சித் தலைவா்களுக்கான காசோலை அதிகாரத்தை நிறுத்திவைத்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:35 pm

DIN

முறைகேடு புகாா் எதிரொலியாக 2 ஊராட்சித் தலைவா்களுக்கான காசோலை அதிகாரத்தை நிறுத்திவைத்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.

மண்ணச்சநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட தீராம்பாளையம் ஊராட்சித் தலைவா் சாவித்திரி, பிச்சாண்டாா்கோவில் ஊராட்சித் தலைவா் சோபனா ஆகியோா் மீது முறைகேடு புகாா்கள் எழுந்தன. நிா்வாகத்தில் இவா்கள் கணவா்களின் தலையீடு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவுப்படி ஊராட்சிகளின் உதவி இயக்குநா் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை மாவட்ட நிா்வாகத்துக்கு சமா்ப்பித்தது.

அதில் இருவா் மீதான புகாா் உறுதி செய்யப்பட்டதால் இரு ஊராட்சித் தலைவா்களுக்கான காசோலை அதிகாரத்தை நிறுத்தி வைத்து ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.