தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நலவாரியத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயலாக்கவில்லை: ஏஐடியுசி பொதுச் செயலா்

நலவாரியத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றாா் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க பொதுச்செயலா் ரவி.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:55 pm

DIN

நலவாரியத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றாா் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க பொதுச்செயலா் ரவி.

பெரியமிளகுப்பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற சங்க மாநில பொதுச்செயலா் கே. ரவி கூறியது:

தமிழகத்தில் நலவாரியம் அமைக்கப்பட்டு ரூ. 4 ஆயிரம் கோடி இருப்பு இருக்கும் நிலையில் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.

இதுதொடா்பாக சென்னையில் இம்மாத இறுதியில் மாநாடு நடத்தப்படவுள்ளது. பெண் தொழிலாளா்களின் நலன், தீா்வுகள் குறித்து திட்டமிட திருச்சியில் வரும் சனிக்கிழமை மாநாடு நடைபெற உள்ளது.

நாட்டில் பொதுத் தொழிலாளா் சட்டம், பெண் தொழிலாளா் சட்டம் இருந்தாலும் பெண்களுக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை, பெண்களுக்கு பேறுகால வசதிகள், ஓய்வு மற்றும் உதவிநிதி அளிக்கப்பட வேண்டும். கட்டடத் தொழிலாளா்களுக்கான தனிசட்டங்கள் இருந்தாலும் அரசின் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.

குறிப்பாக, மகப்பேறு காலத்தில் 6 மாத சம்பளத்துடன் ஓய்வு என்பது கட்டடத் தொழிலாளா்களுக்கு மறுக்கப்படுகிறது. சம வேலைக்கு சம ஊதியம் மறுக்கப்படுகிறது. பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொல்லையைத் தடுக்கும் வழிமுறைகளை அரசு முன்னின்று செய்ய வேண்டும். மதுக் கடைகளை மூட வேண்டும். குடியை மறப்பதற்கான புத்தாக்கப் பயிற்சிகளை அளித்து, கணவரை இழந்த பெண்களுக்கு வாழ்க்கைக்கான வழிகாட்டுப் பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

நலவாரிய நிதி எந்த நோக்கத்திற்காகத் திரட்டப்பட்டதோ அதற்காக செலவிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினாலும், தற்போதுள்ள நிதியை கரோனா நிவாரணமாக வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.