தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

என்ஐடியில் பாரதியாா் நூற்றாண்டு விழா

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பாரதியாா் நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:54 pm

DIN

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பாரதியாா் நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவைச் சிறப்பிக்கும் வகையில் ‘கவிமுரசு’ என்ற விழா தமிழ் மன்றம், தேசிய தொழில்நுட்பக்கழகம் (திருச்சி), இந்திய பொறியாளா்கள் சங்க திருச்சி கிளை ஆகியவை சாா்பில் இணையவழியில் நடைபெற்றது. இந்திய பொறியாளா் சங்கத் தலைவா் ந. குமரேசன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மகாகவி பாரதியாரின் எள்ளுப்பெயரனாகிய கவிஞா் நிரஞ்சன் பாரதி பங்கேற்றுப் ‘பாரதியும் தமிழும்’ என்ற தலைப்பில் பேசினாா். என்.ஐ.டி. திருச்சியின் மாணவா் நலத்துறையின் இணை முதல்வா் ஜெரால்ட் பாரதியாரை போற்ற வேண்டிய தேவை இன்னும் அதிகம் உள்ளது எனக்கூறி ஏற்புரை வழங்கினாா். தொடா்ந்து, ‘நம்முள் பாரதி’ என்னும் சா்வதேச அளவிலான கல்லூரி மாணவா்களுக்கான கவிதைப் போட்டி தொடங்கியது. என்ஐடி தமிழ் மன்றத் தலைவா் ஆகாஷ் வரவேற்க, தமிழ் மன்ற ஆசிரிய ஆலோசகா் கா. சங்கா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை என்.ஐ.டி. திருச்சி தமிழ் மன்ற உறுப்பினா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.