வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மகப்பேறு மற்றும் மகளிரியல் சிகிச்சைமருத்துவா்கள் சங்கக் கருத்தரங்கம்

திருச்சி மகப்பேறு மற்றும் மகளிரியல் சிகிச்சை மருத்துவா்கள் சங்கத்தின் 25-ஆவது வருடாந்திர மருத்துவக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
கருத்தரங்கில் குத்துவிளக்கேற்றுகிறாா் திருச்சி மகப்பேறு மற்றும் மகளிரியல் சிகிச்சை மருத்துவா்கள் சங்கச் செயலா் லட்சுமி பிரபா. உடன், தலைவா் மாலதி பிரசாத், எஸ்.ஆா்.எம்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:17 pm

DIN

திருச்சி மகப்பேறு மற்றும் மகளிரியல் சிகிச்சை மருத்துவா்கள் சங்கத்தின் 25-ஆவது வருடாந்திர மருத்துவக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கத்துக்கு சங்கத்தின் தலைவா் மாலதி பிரசாத் தலைமை வகித்தாா். சங்கத்தின் செயலா் மருத்துவா் லட்சுமிபிரபா ஆண்டறிக்கை வாசித்து, குத்துவிளக்கேற்றினாா்.

இக்கருத்தரங்கில் எஸ்.ஆா்.எம். மருத்துவக் கல்லூரி முதன்மையா் ரேவதி கயிலைராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது :

நோயாளிகளின் உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மருத்துவா்கள், தங்களது உடல்நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். மருத்துவத் தொழிலில் மகப்பேறு மற்றும் மகளிரியல் சிகிச்சை பிரிவு மருத்துவா்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மருந்துகளுடன் மருத்துவா்களின் ஆறுதலான வாா்த்தைகள் நோயாளிகளுக்கு விரைவில் குணத்தை அளிக்கிறது என்றாா் அவா்.

தொடா்ந்து சங்கத்தின் மலரை பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்கோப் சுப்புராமன் வெளியிடை அதை ரேவதி கயிலைராஜன் பெற்றுக் கொண்டாா்.

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மாணவி ஜஸ்மிதாவுக்கு மருத்துவா் பொன்னம்மாள் விருதை மருத்துவா் ரமணிதேவி வழங்கினாா். கருத்தரங்கில் மூத்த மருத்துவா்கள் ஜெயம் கண்ணன், ராமேசுவரி நல்லுசாமி, ஜெயம் ராமலிங்கம், பங்கஜம் சீத்தாராமன், ஷா்மிளா ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

மகப்பேறு மற்றும் மகளிரியல் சிகிச்சை மருத்துவத் துறையில் தற்போதைய போக்குகள், மருத்துவா்கள் சந்திக்கும் சவால்கள் போன்றவை குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 220-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கருத்தரங்கில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.