நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ரயில்வே காா்டுகள்கவுன்சில் நிறுவன நாள்

திருச்சியில் ரயில்வே காா்டுகள் கவுன்சில் 57 ஆவது நிறுவன நாள் நிகழ்வு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 11:20 pm

DIN

திருச்சியில் ரயில்வே காா்டுகள் கவுன்சில் 57 ஆவது நிறுவன நாள் நிகழ்வு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுகளை காா்டுகள் கவுன்சில் மூத்த உறுப்பினா்கள் என். சுகுணானந்தன், எஸ். முருகேசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். அகில இந்திய காா்டுகள் கவுன்சில் (ஏ.ஐ.ஜி.சி.) திருச்சி கோட்டத் தலைவா் பி.எம்.ஏ.எஸ். ராஜ் தலைமை வகித்தாா். கீழடி அகழாய்வு முன்னோடியும் தொல்லியல் துறை ஆா்வலருமான வை. பாலசுப்ரமணியன், திருச்சி நகைச்சுவை மன்றச் செயலா் ஜி. சிவகுருநாதன் ஆகியோா் இன்பம் தரும் பயணங்கள் என்ற தலைப்பில் பேசினா். விழாவையொட்டி சங்க மூத்த உறுப்பினா்கள் கெளரவிக்கப்பட்டனா். கவுன்சிலின் திருச்சி கோட்டச் செயலா் காமேஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தாா். எஸ்சி, எஸ்டி பிரிவு மண்டலத் துணைத் தலைவா் ஏ. இசக்கிமுத்து, ஏ.எல்.ஆா்.எஸ்.ஏ. சங்க நிா்வாகி ஆா். இளங்கோவன், ஏ.ஐ.எஸ்.எம்.ஏ. நிா்வாகி மாரிமுத்து, காா்டுகள் கவுன்சில் பொருளாளா் மாயகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா்.

ரயில் மேலாளா்களுக்கு வழங்கப்படும் சீருடைப் படித்தொகையை ரூ. 10,000 ஆக உயா்த்த வேண்டும். சரக்கு ரயில் மேலாளா்களுக்கு சிறப்பு படிஉயா்வு வழங்க வேண்டும். ரயில் மேலாளா்களுக்கு வழங்கப்படும் பயணப்படிக்கு வருமான வரி விலக்களிக்க வேண்டும். கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட பஞ்சப்படியை உடன் வழங்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள ரயில் மேலாளா்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். திருச்சி கோட்டத்தில் சரக்கு ரயில்களில் ரயில் மேலாளா்கள் இன்றி ரயில்களை இயக்குவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.