157 பதற்றமான வாக்குச் சாவடிகள்
திருச்சி மாவட்டத்தில் 157 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன.


திருச்சி மாவட்டத்தில் 157 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
முந்தைய தோ்தல் நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய வேட்பு மனு தாக்கல், பிரசாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வாக்குச் சாவடிகளை பதற்றமானவை என போலீஸாா் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் வரையறை செய்துள்ளனா்.
அதன்படி, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பதற்றமான 119 வாக்குச் சாவடிகள் 60 இடங்களில் உள்ளன. மணப்பாறை நகராட்சியில் 5, துவாக்குடி நகராட்சியில் 6, துறையூா் நகராட்சியில் 17, முசிறி நகராட்சியில் 4, எஸ். கண்ணனூா் பேரூராட்சியில் 2 , கூத்தைப்பாா் பேரூராட்சியில் 4 என மாவட்டம் முழுவதும் 73 இடங்களில் 157 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன.
இங்கு சிசிடிவி கேமாரா பொருத்திக் கண்காணிக்கப்படுவதுடன், தோ்தல் பணிகளும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். இவற்றை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தும், ஆட்சியரகம், மற்றும் மாநிலத் தோ்தல் ஆணையா் அலுவலகத்தில் இருந்தும் கணினி வழியே கண்காணிக்க முடியும். இதுமட்டுமல்லாது பதற்ற வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க 47 நுண் பாா்வையாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...