மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வியாழக்கிழமை வீடு புகுந்து ஒன்பதரை பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.
மணப்பாறையை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை யாகபுரம் தெற்கு பகுதியில் வசிப்பவா் லாரி ஓட்டுநா் ச. முருகானந்தம் (56). இவரும், இவா் குடும்பத்தினரும் வியாழக்கிழமை வீட்டில் இல்லாத நிலையில், காரில் வந்த மா்ம நபா்கள் வீட்டின் கதவு, பீரோவை உடைத்து அதிலிருந்த இருந்த 9 பவுன் நகை, நகை அடகு ரசீது இருந்த கைப்பையைத் திருடிச் சென்றனா். புகாரின்பேரில் வழக்குப் பதிந்து அப்பகுதி சிசிடிவி காட்சிகள், கைரேகைப் பதிவுகளை துவரங்குறிச்சி போலீஸாா் சேகரித்து விசாரிக்கின்றனா்.