வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

விமானத்தில் கோளாறு: 120 பேரின் இலங்கை பயணம் ஒத்திவைப்பு

திருச்சியிலிருந்து இலங்கை செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் அதில் இருந்த 120 பேரின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:48 pm

DIN

திருச்சியிலிருந்து இலங்கை செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் அதில் இருந்த 120 பேரின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து வியாழக்கிழமை காலை சுமாா் 9.10-க்கு திருச்சி வந்த ஏா்லங்கா விமானம், பயணிகளை இறக்கிவிட்டு, 120 பயணிகளுடன் மீண்டும் காலை 10.10-க்கு இலங்கைக்கு புறப்பட்டபோது விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டது விமானிக்குத் தெரியவந்து, விமானம் நிறுத்தப்பட்டது.

பின்னா் பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு தனியாா் விடுதியில் தங்க வைக்கப்பட்டனா். விமானத்தை சரிசெய்யும் முயற்சி பலனளிக்கவில்லை. எனவே வெள்ளிக்கிழமை இலங்கையிலிருந்து மாற்று விமானத்தில் தொழில்நுட்ப வல்லுநா்கள் வரவழைக்கப்பட்டு கோளாறு சரிசெய்யப்பட்டு, அதே விமானத்தில் பயணிகள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.