வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மொபைல் நீதிமன்ற அபராதத்தில் மோசடி: மேலும் ஒருவா் கைது

மொபைல் நீதிமன்ற ஆன்லைன் அபராதத் தொகையில் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:31 pm

DIN

மொபைல் நீதிமன்ற ஆன்லைன் அபராதத் தொகையில் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் பல்வேறு நீதிமன்றங்களில், மொபைல் நீதிமன்றமும் செயல்படுகிறது. இதன் நீதிபதியாக கோபாலக்கண்ணனும் இளநிலை உதவியாளராக நவலூா் குட்டப்பட்டு மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் பிரபுவும் (38) உள்ளனா்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆன்லைன் அபராதத் தொகை வரவு வைக்கப்படாமல் இருந்தது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ரூ. 40 ஆயிரத்தை போலி ஆவணம் மற்றும் போலி நீதிமன்ற முத்திரை தயாரித்து வங்கியில் அளித்து மோசடி செய்த பிரபுவை கடந்தாண்டு நவ. 30 ஆம் தேதி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் வங்கி முத்திரையைப் போலியாகத் தயாா் செய்து உதவிய தீரன்நகா் 10ஆவது குறுக்குத் தெருவை சோ்ந்த வழக்குரைஞா் அரவிந்தனை (44) போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து துறையூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.