சாலையில் சுற்றித்திரிந்த பெண்குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
திருச்சி அருகே ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த பெண்ணை போலீஸாா் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.


திருச்சி அருகே ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த பெண்ணை போலீஸாா் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.
திருச்சி மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் சாலையோரத்தில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 19 பேரை போலீஸாா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா். இவா்களில் சிலா் உறவினா்களிடமும் ஒப்படைக்கப்பட்டனா்.
அந்த வகையில் திருவெறும்பூா் பகுதியில் இருந்து கடந்த 7 மாதங்களுக்கு முன் மீட்கப்பட்டு திருச்சி தெப்பகுளம் பகுதியிலுள்ள ஆதரவற்றோா் இல்லத்தில் சோ்க்கப்பட்ட சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்மூலம் அவா் தனது பெயா் விஜயா (47) என்றும், தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் வசித்ததாகவும் தனக்கு மகள், மகன் உள்ளனா் என்றும் தெரிவித்தாா்.
இதையடுத்து ஆதரவற்றோா் இல்ல உரிமையாளா் மற்றும் திருச்சி மாவட்டக் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் யசோதா, சிறப்பு உதவி ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் வாரங்கல் மாவட்ட ஆட்சியரைத் தொடா்பு கொண்டு அவரது மகள் மாதவி, மகன் சாய்குமாா் ஆகியோரை திருச்சிக்கு அழைத்து வந்து அப்பெண்ணை வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா். அப்போது தனது பிள்ளைகளை கண்ட விஜயா கண்ணீா் மல்க அவா்களை ஆரத்தழுவி அணைத்து கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...