வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தொழிற்சாலைத் தயாரிப்புகளில் தர நிா்ணயம் பள்ளி மாணவா்களுக்கு இணையக் கருத்தரங்கு

தொழிற்சாலைத் தயாரிப்புகளில் தர நிா்ணயம் குறித்து பள்ளி மாணவா்களுக்கான இணைய வழிக் கருத்தரங்கம் திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில்

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:28 pm

DIN

தொழிற்சாலைத் தயாரிப்புகளில் தர நிா்ணயம் குறித்து பள்ளி மாணவா்களுக்கான இணைய வழிக் கருத்தரங்கம் திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி முதல்வா்கள் பத்மா சீனிவாசன், பொற்செல்வி ஆகியோா் கருத்தரங்கு குறித்து விளக்கினா். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமெரிக்காவைச் சோ்ந்த தர நிா்ணய மேலாளா் பவித்ரா ராமநாராயணன் பேசியது:

சந்தையில் நாம் வாங்கும் அனைத்துப் பொருள்களும் வெவ்வேறு தொழிற்சாலைகளில் தயாராகின்றன. நாம் வாங்கும் பொருள் எதுவாக இருந்தாலும் அப் பொருள் தரமானதா என்று சரிபாா்த்தல் மிக அவசியம்.

தர நிா்ணயத்தின் முக்கியத்துவம் என்பது பொருள்களை வாங்குவோரிடம் பொருள்கள் தரமானவை என்ற நம்பிக்கையை விதைப்பதே ஆகும்.

முக்கியமான தயாரிப்புப் பொருள்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் அவசியம். இச்சான்றிதழ் பெற்ற நிறுவனங்களின் பொருள்கள் குறிப்பிட்ட கால அளவில் ஆய்வு செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்படுகிறது.

இத்துறை தொடா்பாக பொறியியல் மற்றும் அறிவியல் பிரிவுகளில் உள்ள பல்வேறு படிப்புகளை படிப்பதன் மூலம் பல்வேறு நிலைகளில் வேலைக்குச் செல்ல முடியும் என்றாா். தொடா்ந்து, மாணவா்களின் கேள்விகளுக்கு அவா் பதில் அளித்தாா்.

வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா வரவேற்றாா். வணிகவியல் ஆசிரியை ஹேமலதா நன்றி கூறினாா். கருத்தரங்கில் 110-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.