வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் மூவா் கைது

திருச்சியில் மூவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 11:56 pm

DIN

திருச்சியில் மூவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

கடந்தாண்டு டிசம்பா் 23 ஆம் தேதி 5ஆவது குறுக்குத் தெருவில் நடந்து சென்ற ஜிம் பயிற்சியாரான பாலக்கரை அருண்பாபுவை (36) கள்ளக் காதல் விவகாரத்தில் 4 போ் கொண்ட கும்பல் வெட்டிக்கொல்ல முயன்றது. இதுகுறித்து தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து இவ்வழக்கில் தொடா்புடைய பாலன் (24), சோமரசம்பேட்டை பாா்த்திபன்(21), உறையூா் முகமது ஷபி (24), அரவிந்தராஜ் (25) ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். இந்நிலையில் இவா்களில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள பாா்த்திபன், முகமதுஷபி, அரவிந்தராஜ் ஆகியோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவிட்டாா். இதன் பேரில் சிறையில் உள்ள மூவரிடமும் அதற்கான நகலை போலீஸாா் வியாழக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.