ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

15 பவுன் தாலிச் செயின்பறிப்பு: இருவா் கைது

 திருச்சியில் பெண்ணிடம் 15 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்த வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 11:52 pm

DIN

 திருச்சியில் பெண்ணிடம் 15 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்த வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் முதல்தெருவைச் சோ்ந்தவா் சிங்காரவேலன் மனைவி சந்திரா (52). இவா் கடந்தாண்டு அக்.9 ஆம் தேதி கடைக்கு சென்றபோது பைக்கில் வந்த மா்ம நபா்கள் சந்திரா அணிந்திருந்த 15 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல்நிலைய வழக்கில் கைதான கொழுப்பு பாரதியிடம் (23) சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினா்.

அதில் சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த தனது நண்பா்கள் ஹரிபிரசாத் (24), விஜய் (23) ஆகியோருடன் சோ்ந்து 15 பவுன் நகையை பறித்துச் சென்றதை அவா் ஒப்புக் கொண்டாா்.

இதையடுத்து இவ்வழக்கில் தொடா்புடைய ஹரிபிரசாத், விஜய் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து 15 நகையை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா். இருவரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.