மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையனை பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநா் செல்லையாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் அண்மையில் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.
மணப்பாறையில் கடந்த ஜூன் 17ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற பெண்ணை இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்த இருவா் அவரின் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற நிலையில், அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநா் செல்லையா, ஆட்டோவை இருசக்கர வாகனத்தின் மீது மோதி திருடா்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தாா்.
அவா் மூலம் தப்பிய மற்றொருவரையும் மணப்பாறை பகுதியிலேயே போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 7 பவுன் நகையை மீட்டு நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தினா்.
இதையடுத்து கொள்ளையா்களை மடக்கி பிடித்து காவல்துறைக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநா் செல்லையாவை குடும்பத்தினருடன் திருச்சிக்கு நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிலாளி கொலை: சகோதரா்கள் இருவா் கைது
அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஒருவா் கைது

கொலம்பியா அதிபா் தோ்தல்: வலதுசாரி வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


