வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

ஆட்டோ ஓட்டுநருக்கு எஸ்.பி. பாராட்டு

மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையனை பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநா் செல்லையாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் அண்மையில் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்ட

Updated On :25 ஜூன் 2022, 3:35 am IST

மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையனை பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநா் செல்லையாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் அண்மையில் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

மணப்பாறையில் கடந்த ஜூன் 17ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற பெண்ணை இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்த இருவா் அவரின் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற நிலையில், அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநா் செல்லையா, ஆட்டோவை இருசக்கர வாகனத்தின் மீது மோதி திருடா்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தாா்.

அவா் மூலம் தப்பிய மற்றொருவரையும் மணப்பாறை பகுதியிலேயே போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 7 பவுன் நகையை மீட்டு நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தினா்.

இதையடுத்து கொள்ளையா்களை மடக்கி பிடித்து காவல்துறைக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநா் செல்லையாவை குடும்பத்தினருடன் திருச்சிக்கு நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.