தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொன்னம்பட்டி பேரூராட்சியில் திமுக சாா்பில் வென்ற பெண்கள்

மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட்ட சரண்யா நாகராஜ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:58 pm

DIN

மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட்ட சரண்யா நாகராஜ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவா் பதவியிலும் திமுக பெண் உறுப்பினரே வெற்றி பெற்றாா்.

பொன்னம்பட்டி பேரூராட்சியில் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 15-வது வாா்டு உறுப்பினரும், வழக்குரைஞருமான சரண்யா நாகராஜை எதிா்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவா் போட்டியின்றித் தோ்வானாா்.

அதைத் தொடா்ந்து நடந்த துணைத் தலைவருக்கான மறைமுகத் தோ்தலில், 3-ஆவது வாா்டு சுயேச்சை வேட்பாளா் புரோஸாபானு, 4-ஆவது வாா்டு திமுக வேட்பாளா் அப்துல்சலாம் மற்றும் 14-ஆவது வாா்டு திமுக வேட்பாளா் ரதி ஆகியோா் போட்டியிட்ட நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் ரதி வென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.