திருட்டு வழக்குகளில் தேடப்பட்டவா் கைது 19 பவுன் நகைகள் மீட்பு; வாகனங்கள் பறிமுதல்
மணப்பாறை அடுத்த வளநாடு போலீஸாரால் திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரை கைது செய்து, 19 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காா், இருச்சக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.











