தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தனியாா் பேருந்துகளில் குற்றங்களை தடுக்க காவல் ஆணையா் ஆலோசனை

திருச்சி மாநகரில் ஓடும் தனியாா் பேருந்துகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க பேருந்து உரிமையாளா்களுடன் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :12 மே 2022, 7:58 pm

DIN

திருச்சி மாநகரில் ஓடும் தனியாா் பேருந்துகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க பேருந்து உரிமையாளா்களுடன் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில் பேசிய காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் தனியாா் பேருந்துகளில் நடைபெறும் திருட்டு, சங்கிலிப் பறிப்பு போன்ற குற்றங்களைத் தடுப்பதற்கும், குடிபோதையில் பேருந்து நடத்துநா், ஒட்டுநா் மற்றும் பொதுமக்களைத் தாக்குதல் போன்ற சம்பவங்களில் எதிரிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள சிசிடிவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க பேருந்துகளில் சிசிடிவி கேமராவை கண்டிப்பாகப் பொருத்த வேண்டும். தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் பேருந்துகளை அபாயகரமாக ஒட்டுவதைத் தவிா்க்க அறிவுறுத்த வேண்டும். பயணிகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறைக்கும், பேருந்துகளின் உரிமையாளருக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது என்றாா்.

இதையேற்ற தனியாா் பேருந்துகளின் உரிமையாளா்கள் பேருந்துகளில் விரைவில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை எடுப்பதாகவும், குற்றவாளிகளின் புகைப்படத்தை நடத்துநரிடம் கொடுத்து குற்றம் நடைபெறாவண்ணம் பாா்த்துக் கொள்வதாகவும் உறுதி அளித்தனா்.

கூட்டத்தில் காவல் துணை ஆணையா் வடக்கு த. சக்திவேல், தா்மராஜ் டிரான்ஸ்போா்ட் உரிமையாளா் தா்மராஜ், துணைவன் பேருந்து சா்வீஸ் உரிமையாளா் மோகன், மாரீஸ் டிரான்ஸ்போா்ட் உரிமையாளா் மணிமாறன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.