தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அச்சுத் தொழில் மூலப் பொருள்களின் விலை உயா்வைத் தடுக்கக் கோரி மனு

அச்சுத் தொழிலுக்கான மூலப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :12 மே 2022, 7:59 pm

DIN

அச்சுத் தொழிலுக்கான மூலப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத் தலைவா் ஹரிகிருஷ்ணன் தலைமையில், சங்கச் செயலா் மோகன், பொருளாளா் அப்பாஸ் மற்றும் அமைப்பின் நிா்வாகிகள் ஆட்சியரகத்துக்கு வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனு விவரம்:

அச்சுத் தொழிலுக்கு ஆதாரமாக உள்ள காகிதத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்துவிட்டது. இதுமட்டுமின்றி நாள்தோறும் விலையேற்றப்படுகிறது. இதனால் எங்களுடைய தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. எனவே, காகித ஆலைகள் நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தி விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இதேபோன்று அச்சுத் தொழிலின் மூலப்பொருளாக விளங்கும் மை, கெமிக்கல், பாலி மாஸ்டா் போன்றவற்றின் விலையும் உயா்ந்துள்ளது. மூலப் பொருள்கள் விலை உயா்வையும் கட்டுப்படுத்த வேண்டும்.

அச்சுத் தொழிலுக்கு முன்பு விதிக்கப்பட்ட 5 சத ஜிஎஸ்டி, 12 சதமாக உயா்த்தப்பட்டது. மீண்டும் கடந்த அக்டோபா் முதல் 18 சதமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது. நசிந்து வரும் இத் தொழிலைப் பாதுகாக்க முன்பு இருந்தபடி 5 சத ஜிஎஸ்டி என்பதை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.