தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மே 17-இல் ஆளுநா் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் முடிவு

வரும் 17ஆம் தேதி ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டமும், மே 22 இல் பல்லக்கு தூக்கும் நிகழ்வைத் தடை செய்யக் கோரி மயிலாடுதுறையில் போராட்டமும் நடத்தவுள்ளதாக மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்துள்ளது.

News image
Updated On :12 மே 2022, 7:58 pm

DIN

வரும் 17ஆம் தேதி ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டமும், மே 22 இல் பல்லக்கு தூக்கும் நிகழ்வைத் தடை செய்யக் கோரி மயிலாடுதுறையில் போராட்டமும் நடத்தவுள்ளதாக மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் சி. ராஜு, மாநிலப் பொருளாளா் காளியப்பன் ஆகியோா் திருச்சியில் வியாழக்கிழமை கூறியது:

தமிழக ஆளுநரின் செயல் போட்டி அரசாங்கத்தை நடத்துவதாக அமைந்துள்ளது. எனவே, தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டித்தும் வரும் 17ஆம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

இதேபோல பல்லக்கு தூக்கும் நிகழ்வைத் தடை செய்யக் கோரி மே 22 இல் மயிலாடுதுறையிலும் போராட்டம் நடத்தப்படும்.

பல்லக்கு தூக்கும் நிகழ்வை தமிழக அரசு நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். ஆதீனங்கள், மடாலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை நிலமற்ற கூலி விவசாயிகளுக்கும், குத்தகை விவசாயிகளுக்கும் பிரித்து வழங்க வேண்டும். மதத்தின் பெயரால், ஆன்மீகத்தின் பெயரால் நடத்தப்படும் அனைத்து மூடத்தனங்களையும் தடை செய்ய வேண்டும் என்றனா்.

பேட்டியின்போது மாவட்டச் செயலா் செழியன், மகஇக மாவட்டச் செயலா் ஜீவா, பாடகா் கோவன், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்டச் செயலா் முருகானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.