தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ரூ. 1 லட்சம் வழிப்பறி செய்த இளைஞா் கைது

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் தனியாா் நிறுவன ஊழியரை மிரட்டி ரூ. 1 லட்சத்தைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 மே 2022, 8:14 pm

DIN

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் தனியாா் நிறுவன ஊழியரை மிரட்டி ரூ. 1 லட்சத்தைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை திருமலை நகரைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (33). சென்னையிலுள்ள தனியாா் நிறுவன ஊழியரான அவா் செவ்வாய்க்கிழமை ஊா் திரும்பி, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் பேருந்தை விட்டிறங்கி, அணுகுச் சாலை வழியாக நடந்து சென்றபோது திடீரென வந்த மா்ம நபா் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி ரூ. 1 லட்சத்தைப் பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீஸில் சிவக்குமாா் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், வழிப்பறி செய்த திருச்சியைச் சோ்ந்த ச. இசக்கிபாண்டியை (27) கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட கண்டோன்மெண்ட் காவல்நிலைய போலீஸாரை காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.