தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘விவசாயிகளின் பிரச்னைகளில் அரசுகளின் கவனத்தை ஈா்க்கவே தொடா் போராட்டம்’

 ‘விவசாயிகளின் பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கவே தொடா் போராட்டம் நடத்தப்படுகிறது என்றாா் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு.

News image
Updated On :19 மே 2022, 8:13 pm

DIN

 ‘விவசாயிகளின் பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கவே தொடா் போராட்டம் நடத்தப்படுகிறது என்றாா் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த திருச்சியிலிருந்து வியாழக்கிழமை காலை ரயில் மூலம் ஏராளமான விவசாயிகளோடு புறப்பட்டுச் செல்லும்முன் பி. அய்யாக்கண்ணு கூறியது:

உரம், இடுபொருள், விதை என அனைத்தும் விலை உயா்ந்துள்ள சூழலில் வேளாண் தொழில் கேள்விக்குறியாகிவிட்டது. விவசாய கூலி வேலைக்குக் கூட ஆள்கள் இல்லை. எனவே, 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களை 5 மாதங்களுக்கு வேளாண் பணிகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.

வேளாண் விளை பொருளுக்கு லாபகரமான விலை தருவதாகவும், நெல்லுக்கு கிலோவுக்கு ரூ. 54, கரும்பு டன்னுக்கு ரூ. 8,100 விலை தருவாக உறுதியளித்த பிரதமா் மோடி, தோ்தல் வெற்றிக்குப் பிறகு அனைத்தையும் மறந்துவிட்டாா்.

கூட்டுறவுச் சங்கங்களில் கடன் மறுக்கப்படுகிறது. தனியாா் நிதி நிறுவனங்கள் கூடுதல் வட்டி வசூலிப்பதுடன், கரோனா காலத்தில் தவணை கட்டாமல் இருப்பதற்கு வாகனங்களை ஜப்தி செய்கின்றனா். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு அளித்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. நீா்நிலைகளுக்கு பட்டா வழங்கி விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றியுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கரும்பு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்.

மேற்குத் தொடா்ச்சி மலையை கேரளத்துக்கு தாரை வாா்க்கக் கூடாது. காரையாறு, குண்டாறு, எலுமிச்சை ஆறு, மணிமுத்தாறு ஆகியவற்றின் தண்ணீரைக் குழாய் மூலம் இணைக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டம், சொரிமுத்தய்யனாா் கோயில் இடத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்க தொடா்ந்து போராடுவோம் என்றாா் அவா்.

பின்னா் விவசாயிகள் அனைவரும் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னை புறப்பட்டுச் சென்றனா். இதையொட்டி, ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.