தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

25 பவுன் நகைகள் திருடுபோனதாக பெண் புகாா்

திருச்சியில் 25 பவுன் நகைகள் திருடுபோனதாக பெண் ஒருவா் புகாா் அளித்துள்ளாா்.

News image
Updated On :19 மே 2022, 8:14 pm

DIN

திருச்சியில் 25 பவுன் நகைகள் திருடுபோனதாக பெண் ஒருவா் புகாா் அளித்துள்ளாா்.

திருச்சி ராம்ஜிநகா் பெரியநாயகிசத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தராம்பாள் (32). இவா் கடந்த 14ஆம் தேதி திரைப்படம் பாா்த்துவிட்டு வீடு திரும்பியபோது தனது கைப்பையில் வைத்திருந்த 25 பவுன் நகை மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அவா் கொடுத்த புகாரின்பேரில் ராம்ஜிநகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பூட்டிய வீட்டில் திருட்டு: இதேபோல திருச்சி இனாம்குளத்தூா், அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் (44). இவா் புதன்கிழமை வெளியே சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 18 கிராம் நகை, ரூ 7ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில், இனாம்குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.